குடிக்கும் சாதியாகத்தான் வன்னியர்கள் இருக்க வேண்டுமா? இராமதாஸ் ஆவேசம்!

by Loganathan, Nov 23, 2020, 21:42 PM IST

கூட்டுப் பொதுக்குழு கூட்­டத்­தில் பா.ம.க. நிறு­வ­னர் ராம­தாஸ் பேசி­ய­தா­வது: போராட்­டம் என்­பது நமக்கு லட்டு தின்­ப­தைப் போன்­றது. 1987&ஆம் ஆண்­டில் வன்­னி­யர்­களுக்கு தனி இட ஒதுக்­கீடு கோரி ஒரு வாரத்­திற்கு தொடர் சாலை­ம­றி­யல் என்ற மிகக் ­க­டு­மை­யான போராட்­டத்தை நடத்­தி­னோம். இப்போது அதைவிட மிகக்­க­டு­மை­யான போராட்­டங்­களை நடத்த தயா­ராக இருக்­கி­றோம் என்று இந்­தக் கால இளை­ஞர்­கள் எனக்கு சவால்விடும் வகை­யில் கூறு­கின்­ற­னர். இடஒதுக்­கீட்­டுப் போராட்­டத்தை எவ்­வாறு நடத்­து­வது என்­பது குறித்து முடி­வெடுப்­பதற்­காகத்தான் இங்கு கூடி­யுள்ளோம். வன்­னி­யர்­கள் தமிழ்­நாட்­டில் உழைக்­கும் சமு­தா­யமாக, உணவு படைக்­கும் சமு­தா­ய­மாக, ஒட்­டுப்போடும் சமு­தா­ய­மாக, 25 சத­வீ­தத்­திற்­கும் கூடு­த­லான மக்­கள்­தொகை கொண்ட சமு­தா­ய­மாக உள்­ளனர். கல்வி மற்­றும் வேலை வாய்ப்­பில் வன்­னி­யர்­கள் திட்­ட­மிட்டு ஏமாற்­றப்­பட்­டனர்.

இது­வரை ஆட்­சி­யில் இருந்த அனைத்­துக் கட்­சி­யி­ன­ரும் நம்மை ஏமாற்­றி­னார்­கள். முதன்­முத­லில் காங்­கி­ரஸ் கட்சி நம்மை ஏமாற்­றி­யது. அடுத்­த­தாக திமுக தலை­வர் கலை­ஞர் மிக­வும் சாமர்த்­தி­ய­மாக திட்­டம் வகுத்து ஏமாற்­றி­னார். வன்­னி­யர்­கள் கல்வி கற்­கக் கூடாது; வேலைக்கு செல்­லக் கூடாது என்று திட்­ட­மிட்டு தான் ஏமாற்­றி­னார். எம்.ஜி.ஆரும் நம்மை ஏமாற்­றி­னார். அவ­ருக்­குப் பிறகு ஆட்­சிக்கு வந்­த­வர்­களும் நம்மை ஏமாற்­றி­னர்.1950 களில் வன்­னி­யர்­களில் ஊருக்கு ஒரு­வர் கூட படித்­தி­ருக்கமாட்­டார்­கள். கடி­தம் வந்­தால் மற்­ற­வர்­களி­டம் கொடுத்து படிக்­கச் சொல்­வார்­கள். தந்தி வந்தால் அடுத்த ஊரில் உள்ள அய்­ய­ரி­டம் கொடுத்து படிக்­கச் சொல்­வார்­கள். பத்தி­ரத்­தில் கையெ­ழுத்­திட வேண்­டும் என்றால் வண்டி சக்­க­ரத்­தில் உள்ள கருப்புமையை எடுத்து கைரேகை வைப்­பார்­கள். அந்த நிலையில் தான் வன்­னி­யர்­கள் அப்போது இருந்­தார்­கள்.

அதன்­பி­றகு இந்த ராம­தாஸ் உருவெ­டுத்து போராட்­டம் நடத்தி பிற்­படுத்­தப்­பட்டோ­ருக்கான 50 விழுக்­காடு இட ஒதுக்கீட்டைப் பிரித்து 20 சத­வீத மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­ன­ருக்­கான இட ஒதுக்­கீடு பெற்­றுக் கொடுத்­தி­ருக்­கா விட்­டால் என்ன ஆகி­யி­ருக்­கும்? இப்போது இருப்­பதை விட மிகவும் மோச­மான நிலைக்கு வன்­னி­யர் சமு­தா­யம் சென்றிருக்கும். கலை­ஞர் 15 உயர்­சா­தி­களை­யும், எம்.ஜி.ஆர் 29 உயர்­சாதிகளையும் பிற்­ப­டுத்­தப்­பட்டோர் பட்­டி­ய­லில் சேர்த்­தனர். அவர்­க­ளு­டன் வன்­னி­யர்­களால் போட்­டி­யிடமுடி­யாது. அத­னால் தான் வன்­னி­யர்­களுக்கு 20 சத­வீத தனி இட ஒதுக்­கீடு வழங்க வேண்­டும் என்று கோருகிறோம். வன்­னி­யர்­க­ளுக்கு 20 சதவீ­தம் இட ஒதுக்­கீடு வழங்க வேண்­டும் என்று 40 ஆண்­டு­க­ளாக போராடி வரு­கி­றோம்.

வன்­னி­யர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட துரோகத்தை கண்டு இன்­றைய இளை­ஞர்­கள் கொதித்­து­ போய் இருக்­கி­றார்­கள். அய்­யா­வையே ஏமாற்று­கி­றார்­களா என்று ஆவே­ச­ம­டைந்­துள்­ளனர். அவர்­களை திரட்­டி­தான் மிகப்­பெ­ரிய போராட்­டத்தை நாம் நடத்த இருக்­கி­றோம். குஜ­ராத் மாநி­லத்­தில் படேல் சமு­தா­யத்­தி­னர் போராட்­டம் நடத்­தி­யது போன்று, குஜ்­ஜார் சமு­தா­யத்­தி­னர் தங்­க­ளுக்கு தனி இட­ஒ­துக்­கீடு கோரி போராட்­டம் நடத்­தி­யது போன்று நமது போராட்­டமும் மிக கடு­மை­யாக இருக்­கும். நாம் போராட தொடங்­கிய 4 நாட்­க­ளில் நமது கோரிக்­கையை ஏற்றுகொள்­வ­தாக அரசு அறி­விக்க வேண்­டும். அந்த அள­வுக்கு நமது போராட்­டம் தீவி­ரமாக இருக்க வேண்­டும். இது தொடர்­பாக எந்த விளை­வு­கள் ஏற்­பட்­டா­லும் அதை சந்­திக்க நாம்தயா­ராக உள்ளோம். என்று பொதுக்குழு கூட்டத்தில் மரு. இராமதாஸ் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

You'r reading குடிக்கும் சாதியாகத்தான் வன்னியர்கள் இருக்க வேண்டுமா? இராமதாஸ் ஆவேசம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை