குற்றபத்திரிக்கையில் பெயரை நீக்க லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது

குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள ஒருவரது பெயரை நீக்க லஞ்சம் வாங்கிய செக்கானூரணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனிதா கைது செய்யப்பட்டார்

by Balaji, Nov 27, 2020, 15:52 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு பதிவான ஒரு அடிதடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பொன்னம்பலம் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரது மகன் மாரி மற்றும் மருமகன் கமல்பாண்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சம்பவத்தின் போது தனது மகன் மற்றும் மருமகன் சம்பவ இடத்தில் இல்லை எனவும் சட்ட ரீதியாக பெயர்களை நீக்க வேண்டும் என நல்லதம்பி செக்கானூரணி ஆய்வாளர் அனிதாவிடம் முறையிட்டுள்ளார். அதற்கு ஆய்வாளர் அனிதா ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் , தவணைமுறையில் கொடுக்குமாறு சொன்னதால் நல்லதம்பி லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் செய்தார்.

காவல் நிலையத்திற்கு நல்லதம்பியுடன் நேரில் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 30ஆயிரம் ரூபாயை கொடுத்தனர். ஆய்வாளர் அனிதா பணத்தை பெற்றதும் ஒழிப்புதுறையினர் பணத்தை பறிமுதல் செய்து ஆய்வாளர் அனிதாவ கைது செய்தனர். பின்னர் அவர் மதுரை மாவட்ட சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வடிவேல் முன்பாக ஆஜர்ப்படுத்தப்பட் டார். அவரை டிசம்பர் 11ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து காவல்துறை ஆய்வாளர் அனிதா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

You'r reading குற்றபத்திரிக்கையில் பெயரை நீக்க லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை