தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது.. சிகிச்சையில் 11,109 பேர்..

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. புதிதாகப் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 400க்கும் கீழ் சென்றுள்ளது. சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 93 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. இந்நோய்க்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது.

ஆனால், தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பட்டு விட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்குப் பின்பு படிப்படியாகக் குறைந்து நாளொன்றுக்குத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500க்கு கீழ் சென்றுள்ளது.தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று(நவ.27) 61 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1442 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது.

இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 77,616 பேராக உள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1494 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 54,826 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 12 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,681 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 11,109 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.கடந்த ஒரு மாதமாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று 392 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கோவை மாவட்டத்தில் நேற்று 145 பேருக்குத் தொற்று பாதித்தது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 77 பேருக்கும், திருவள்ளூர் 59, காஞ்சிபுரம் 48, சேலம் 76, ஈரோடு 55, திருப்பூர் மாவட்டத்தில் 60 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்கே நேற்று தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 14,191 பேருக்கும், செங்கல்பட்டில் 47,301 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 40,730 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27,570 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 15 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும்,புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :