தமிழ்நாட்டில் இதுவரை 7.89 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. சிகிச்சையில் 10 ஆயிம் பேர்..

by எஸ். எம். கணபதி, Dec 6, 2020, 15:15 PM IST

தமிழ்நாட்டில் இது வரை 7 லட்சத்து 88,920 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில் தற்போது 10,882 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். 11,777 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் குணம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்கு பிறகு நாள்தோறும் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்கு பின்பு படிப்படியாக குறைந்து தற்போது நாளொன்றுக்கு தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500க்கு கீழ் சென்றுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் நேற்று(டிச.5) 1366 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 88,920 பேராக உள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1407 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 66,261 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 15 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,777 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,882 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.

சென்னையில் நேற்று 353 பேருக்கும், கோவையில் புதிதாக 137 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று புதிதாக நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 17,204 பேருக்கும், செங்கல்பட்டில் 48,089 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 41,287 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 28 ஆயிரம் பேருக்கும் தொற்று மாநிலம் முழுவதும் நேற்று 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading தமிழ்நாட்டில் இதுவரை 7.89 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. சிகிச்சையில் 10 ஆயிம் பேர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை