Advertisement

ஜனவரி 27 இரவு 9.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார்

ஜனவரி 27ம் தேதி இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா. அவரை தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை சசிகலாவுக்குப் பாதுகாப்பு வழங்கக் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வருமானத்திற்கும் அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து சேர்த்துள்ளதாகத் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2014 செப்டம்பர் 27ம் தேதி நீதிபதி ஜான் மைக்கல் டிகுன்ஹா தீர்ப்பு வழங்கினார். இதில், ஜெயலலிதா உள்பட 4 பேரையும் குற்றவாளியாக உறுதி செய்தார். தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் 2017 பிப்ரவரி 14ம் தேதி வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி, குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 45 மாதங்களாகச் சிறையில் உள்ள இவர்களின் தண்டனை காலம், வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது. அவர்கள், நீதிமன்றம் விதித்திருந்த அபராத தொகையைச் செலுத்தாமல் இருந்தனர்.சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகைக்கான வங்கி வரைவோலை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம், கடந்த 17ம் தேதி வக்கீல் சி.முத்துகுமார் செலுத்தினார். இளவரசிக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான டிடியை வக்கீல்கள் அசோகன், பி.முத்துகுமார் ஆகியோர் செலுத்தினர்.சசிகலா ஏற்கனவே இதே வழக்கு தொடர்பாக 48 நாட்கள் சிறையில் இருந்ததை கழிக்க வேண்டும், அவர் சிறையில் இருந்தபோது கன்னட மொழி கற்றுக் கொண்டுள்ளார்.

இதை நன்னடத்தையாகக் கருதி தண்டனை காலம் முடிவதற்கு முன் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில சிறைத் துறை டிஜிபி மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடந்த மாதம் 19ம் தேதி வக்கீல்கள் அசோகன், பி.முத்துக்குமார் ஆகியோர் மனு கொடுத்தனர்.அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி இரவு 9.30 விக்கி விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக எல்லையான அத்திருப்பள்ளி வரை அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சிறைத்துறைக்குக் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
famous-writer-narumbu-nathan-s-sudden-demise-nellai
பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் திடீர் மறைவு... நெல்லையில் அதிர்ச்சி
special-law-to-protect-social-welfare-activists
சமூக நல ஆர்வலர்களை பாதுகாக்க தனிசட்டம் - ஆரல்வாய்மொழி சமூக பொது நல இயக்கம் கோரிக்கை
best-speaker-legislative-assembly-ai-rejects-appavu-s-speech
சிறந்த சபநாயகர், சட்டமன்றம் : அப்பாவு பேச்சுக்கு ஏஐ மறுப்பு
tamil-nadu-s-two-language-policy-should-be-followed-by-all-states
தமிழகத்தின் இரு மொழி கொள்கையை அனைத்து மாநிலங்கும் கடைபிடிக்கும் நிலை - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
oh-my-you-re-the-one-who-fought-with-your-mother-k-n-nehru-creates-a-stir-on-the-banks-of-the-bharani-river
ஏம்பா நீ அன்னைக்கு சண்டை போட்டவன்தானே - பரணி கரையில் கே.என். நேருவால் கலகலப்பு
we-will-expose-evm-fraud-party-members-fighting-for-the-people-petition-the-governor
EVM மோசடியை அம்பலப்படுத்துவோம்... - மக்களுக்காகப் போராடும் கட்சியினர் ஆட்சியரிடம் மனு.
congress-veterans-who-are-swayed-by-the-wealth-of-the-rich-can-apply-for-the-post-online
இணையதளம் வழியாக பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: செல்வப்பெருந்தகை இன்னாவேடிவால் ஆடி போய் கிடக்கும் காங்கிரஸ் பழந் தலைகள்!
actor-vijay-s-y-category-who-has-what-protection-in-india
நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு : இந்தியாவில் யார் யாருக்கு என்ன பாதுகாப்பு?
bjp-is-playing-the-field-with-sengottaiyan-will-aiadmk-be-united
செங்கோட்டையனை வைத்து களம் விளையாடும் பா.ஜ.க : அதிமுக ஒன்று படுமா?
former-sports-minister-ravindranath-attacked-rv-udayakumar
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரே... ஆர்.பி உதயகுமாரை தாக்கிய ரவீந்தரநாத்

READ MORE ABOUT :