நாகர்கோவில் வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற புறக்கணிப்பின் போது வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் மீது நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.8ல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. அப்போது, சிவக்குமார் என்ற வழக்கறிஞர் மட்டும் நாகர்கோவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராகியுள்ளார். இதனால், அவர் வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட். செய்யப்பட்டார்.



இதை எதிர்த்து சிவக்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து சிவக்குமாரை சஸ்பென்ட் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் வழக்கறிஞர்கள் தொழிற்சங்கத்தினரைப் போல போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஏனெனில், இந்த தொழில் மிகவும் புனிதமானது. ஆனால், தற்போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

சில சங்கங்கள் அரசியல் மற்றும் ஜாதி ரீதியான காரணங்களுக்காக கூட போராடுகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞர்களின் போராட்டம் சட்ட விரோதமானது. தனது கட்சிக்காரருக்காக மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். எனவே, அவர் மீதான நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாடு பார்கவுன்சில் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :