குரூப் 1 தேர்வு விடைத்தாளை திருத்த புதிய நடைமுறை : தேர்வாணைய தலைவர் தகவல்

குரூப் 1 தேர்வு விடைத்தாள்களைத் திருத்த புதிய நடைமுறை அமல் படுத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி சேர்மன் பாலசந்திரன் தெரிவித்தார்.ஊட்டியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் வரும் 3-ந்தேதி நடைபெறும்.எழுத 2 லட்சத்தி 56 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்துள்ளனர்.ஹால் டிக்கெட் டவுண்லோடு செய்ய ஆதார் கட்டாயம் என்றிருந்த நிலையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஓ. டி. பி. மற்றும் பிறந்த தேதி மூலமாக ஹால் டிக்கெட்டை பெறலாம். தமிழகத்தில் குரூப் ஒன் தேர்வு எழுத 856 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டி.என்.பி.சி தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க ஓ.எம்.ஆர் சீட்டில் இரண்டு புதிய முறைகள் கொண்டு வரபட்டுள்ளது. அதற்காக ஓ.எம்.ஆர். சீட்டில் தேர்வு எழுதுபவர் எத்தனை கேள்விகள் எழுதி உள்ளார் என்பதை அறை கண்காணிப்பாளர் சரிபார்த்து சான்று அளிக்க வேண்டும்.ஓ.எம்.ஆர் சீட் இரண்டு பகுதிகளாக இருக்கும். அதில் ஒரு பகுதியில் தேர்வு எழுதுபவரின் விபரங்களும் மற்றொரு பகுதியில் அந்த விபரங்கள் பார் கோடாக பதியப்பட்டிருக்கும். தேர்வு முடிந்தவுடன் பார்கோடு உள்ள பகுதி மட்டும் ஸ்கேன் செய்யபடும்.

இதனால் ஓ.எம்.ஆர் சீட் யாருடையது என்ன நம்பர் என்பதே யாருக்கும் தெரியாத அளவிற்கு புதியநடைமுறை கொண்டு வரபட்டுள்ளதாக தெரிவித்தார்.இதற்கு முன்பு நடைபெற்ற டி.என்.பி.சி தேர்வின் போது அழியும் மை கொண்டு எழுதியதாகவும் விடைதாள் எடுத்துச் செல்லும் வழியில் திருத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. அது போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க தேர்வு முடிந்தவுடன் ஓ.எம்.ஆர் சீட்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் வைத்து ஜி.பி.எஸ் லாக் போடப்படும் . அந்த ஜி.பி.எஸ் பெட்டின் ரகசிய எண் கட்டுபாட்டாளருக்கு மட்டுமே தெரியும் என்பதால் முறைகேடு நடைபெறாமல் தடுக்கப்படும். .

தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் . உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு முறையாக கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப் பின்னர் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதிக உடல் வெப்பநிலை, சளி, காய்ச்சல் உள்ளவர்களைத் தனி அறையில் வைத்துத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds

READ MORE ABOUT :