தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் சரிவு..

by எஸ். எம். கணபதி, Jan 12, 2021, 09:19 AM IST

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக நேற்றும் புதிதாக 2438 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நோயால் அம்மாநிலத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52,288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வேகமாகப் பரவிய கொரோனா தொற்று நோய்ப் பாதிப்பு, அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குறையத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 60 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு நேற்று(ஜன.11) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று 63 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், புதிதாக 682 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களைச் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 26,943 ஆக உயர்ந்தது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 869 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 7744 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 6 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,228 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6971 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை 20க்கும் கீழ் குறைந்துள்ளது.

You'r reading தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் சரிவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை