டாலர் கடத்தல் வழக்கில் தொடர்பு கேரள சபாநாயகருக்கு எதிராக 21ம் தேதி சட்டசபையில் விவாதம்

வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக வரும் 21ம் தேதி சட்டசபையில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமார் ஆகியோருடன் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பது சுங்க இலாகாவின் விசாரணையில் தெரியவந்தது. திருவனந்தபுரத்தில் ஸ்வப்னா நடத்தி வரும் ஒரு கார் ஒர்க் ஷாப்பை சபாநாயகர் தான் திறந்து வைத்தார். ஒரு கார் ஒர்க் ஷாப் திறப்பு விழாவுக்கு உயர்ந்த பொறுப்பில் இருக்கும் சபாநாயகரே வந்தது அப்போது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஸ்வப்னா மற்றும் சரித்குமாரிடம் சுங்க இலாகா நடத்திய விசாரணையில், கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு சில முக்கியப் பிரமுகர்களுக்காக டாலர்களை கடத்தியது தெரியவந்தது. அந்த முக்கிய பிரமுகர்களின் பட்டியலில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனும் இருந்தார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்தது. ஆனால் உயர் பதவியான சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் விசாரணை நடத்துவதற்கு முன் சட்ட ஆலோசனை பெற சுங்க இலாகா தீர்மானித்தது. இதில், முறைப்படி நோட்டீஸ் கொடுத்து சபாநாயகரிடம் விசாரணை நடத்தலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்தது. ஆனால் தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதால் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக சபாநாயகரின் உதவியாளர் அய்யப்பன் என்பவரிடம் சுங்க இலாகா விசாரணை நடத்தியது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே டாலர் கடத்தல் வழக்கில் சபாநாயகருக்கு எதிராக புகார் எழுந்துள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து வரும் 21ம் தேதி இது தொடர்பாக விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள சட்டசபையில் சிபிஎம் தலைமையிலான ஆளும் கட்சிக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருப்பதால், இது தொடர்பாக விவாதம் நடந்தாலும் இந்த தீர்மானம் தோல்வியடையவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :