Advertisement

தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி

தொல்லியத் துறை ஆணையர் டி. உதயசந்திரன் இது குறித்துத் தெரிவித்துள்ளதாவது: கடந்த 5ம் தேதி மத்திய தொல்லியல் துறை ஆலோசனை வாரியம் புதிதாக 7 இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை நடத்தப் பரிந்துரை செய்துள்ளது. இதன் விளைவாக, தமிழகத்தில் முதன் முறையாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் அகழ் ஆய்வுகள் நடைபெற உள்ளன. மாநில தொல்லியல் துறை, பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்பட பல அமைப்புகள் இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளன.

தமிழகத்தில் இந்த ஆண்டு தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை நடத்த மாநில அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது.சிவகங்கை மாவட்டத்தில் கீழடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் அதனைச் சுற்றி உள்ள பகுதி, சிவகளை மற்றும் அதன் சுற்று வட்டாரம், கொற்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு நடக்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் பகுதியிலும் . கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறையிலும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் மாளிகையோடு ஆகிய பகுதிகளில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட உள்ளது.

தாமிரபரணி நதி நாகரிகத்தை நிலைநிறுத்தகூடிய வகையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கள ஆய்வு நடத்தப்பட உள்ளது. மற்றொரு கள ஆய்வாக கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் புதிய கற்கால இடங்களை கண்டறிய நடத்தப்பட உள்ளது.தமிழர்களின் பழமையான கலாச்சார பெருமைகளை அறிவியல் முறையில் நிலைநிறுத்த இந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளும், கள ஆய்வுகளும் முக்கிய அம்சங்களாக அமையும். இவ்வாறு உதயசந்திரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க
famous-writer-narumbu-nathan-s-sudden-demise-nellai
பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் திடீர் மறைவு... நெல்லையில் அதிர்ச்சி
special-law-to-protect-social-welfare-activists
சமூக நல ஆர்வலர்களை பாதுகாக்க தனிசட்டம் - ஆரல்வாய்மொழி சமூக பொது நல இயக்கம் கோரிக்கை
best-speaker-legislative-assembly-ai-rejects-appavu-s-speech
சிறந்த சபநாயகர், சட்டமன்றம் : அப்பாவு பேச்சுக்கு ஏஐ மறுப்பு
tamil-nadu-s-two-language-policy-should-be-followed-by-all-states
தமிழகத்தின் இரு மொழி கொள்கையை அனைத்து மாநிலங்கும் கடைபிடிக்கும் நிலை - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
oh-my-you-re-the-one-who-fought-with-your-mother-k-n-nehru-creates-a-stir-on-the-banks-of-the-bharani-river
ஏம்பா நீ அன்னைக்கு சண்டை போட்டவன்தானே - பரணி கரையில் கே.என். நேருவால் கலகலப்பு
we-will-expose-evm-fraud-party-members-fighting-for-the-people-petition-the-governor
EVM மோசடியை அம்பலப்படுத்துவோம்... - மக்களுக்காகப் போராடும் கட்சியினர் ஆட்சியரிடம் மனு.
congress-veterans-who-are-swayed-by-the-wealth-of-the-rich-can-apply-for-the-post-online
இணையதளம் வழியாக பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: செல்வப்பெருந்தகை இன்னாவேடிவால் ஆடி போய் கிடக்கும் காங்கிரஸ் பழந் தலைகள்!
actor-vijay-s-y-category-who-has-what-protection-in-india
நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு : இந்தியாவில் யார் யாருக்கு என்ன பாதுகாப்பு?
bjp-is-playing-the-field-with-sengottaiyan-will-aiadmk-be-united
செங்கோட்டையனை வைத்து களம் விளையாடும் பா.ஜ.க : அதிமுக ஒன்று படுமா?
former-sports-minister-ravindranath-attacked-rv-udayakumar
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரே... ஆர்.பி உதயகுமாரை தாக்கிய ரவீந்தரநாத்

READ MORE ABOUT :