ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை : நீதிபதிகள் கைவிரிப்பு

ஊழல் செய்யும் அதிகாரிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் சட்டத்தை இயற்றும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி லால்குடியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் இந்தியாவில் உள்ள மக்கள் பல்வேறு வகையான வரிகளை அரசுக்குச் செலுத்தி வருகின்றனர். ஆனால் இப்படி மக்கள் கொடுக்கு பணத்தை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். கிட்டத்தட்ட எல்லா அரசுத் துறைகளிலும் பல்வேறு வகையான ஊழல்கள் நடக்கிறது.

குறிப்பாக வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்துத்துறை, வணிகத்துறை மற்றும் கல்வித் துறை ஆகியவற்றின் மிக பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்று வருகிறது. ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு அதிகபட்சம் 7 வருட சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு அதிகாரிகள் எவ்வித பயமுமின்றி ஊழல் செய்து வருகின்றனர். ஊழல் தடுப்பது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு பயனில்லை. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும்.

ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை, வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் அவர்களின் சொத்துக்கள், நகைகள்வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ல் திருத்தம் செய்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று ஊர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மதுரை கிளை நிர்வாக நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் : சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட அரசிடம் மனு அளித்து மனுதாரர் நிவாரணம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்..

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :