காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க புது வழியில் போராடும் மக்கள்!

by Rahini A, Apr 16, 2018, 13:39 PM IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புது யுக்தியை சில இளைஞர்கள் கையில் எடுத்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வழக்கில் `ஸ்கீம்’ என்ற ஒரு வார்த்தைக்கு விளக்கம் என்ன என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது மத்திய அரசு. மேலாண்மை வாரியம் அமைப்பதில் இன்னும் இழுபறியான நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், மே-3 தேதிக்கு இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எப்படியும் அடுத்த மாதம் கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர்தான் இதற்கான ஒரு தீர்வு எட்டப்படும் என்று அரசியல் நோக்கர்களும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், `உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு’ என்கின்ற கோஷம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகள், அமைப்புகள், மக்களிடத்திலும் எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இளைஞர்கள் சிலர் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வித்தியாசமாக போராட்ட யுக்தியைக் கையிலெடுத்துள்ளனர்.

தங்களில் இரு சக்கர வாகனத்தில் `வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற வாசகத்தை ஒட்டியபடி கோரிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த செயலை பலர் பாராட்டி வரவேற்று வருகின்றனர். இணையத்திலும் வைரல் ஹிட்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க புது வழியில் போராடும் மக்கள்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை