சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல்..

by எஸ். எம். கணபதி, Feb 6, 2021, 09:03 AM IST

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று(பிப்.5) புதிதாகப் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த வைரஸ் நோய் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் தினமும் 5 ஆயிரம், 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. தினமும் சுமார் 100, 200 பேர் இந்த நோய்க்குப் பலியாயினர். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நோய்ப் பரவுவது குறையத் தொடங்கியது.

ஆனாலும், சென்னை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நோய் பரவல் முழுமையாகக் கட்டுப்படவில்லை.தமிழக அரசு நேற்று(பிப்.5) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 52 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 489 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 40,849 ஆக உயர்ந்தது.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 506 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 24,024 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 4 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,379 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4446 ஆகக் குறைந்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கொரோனா பரவுவது நீடிக்கிறது. சென்னையில் தினமும் சராசரியாக 150 பேருக்கும், கோவையில் 50 பேருக்கும் தொற்று பரவி வருகிறது. சென்னையில் நேற்று புதிதாக 158 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 54 பேருக்கும், செங்கல்பட்டு 45 பேர், திருவள்ளூர் 35 பேர், திருச்சி 20, தஞ்சாவூரில் 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 15க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

You'r reading சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை