அரசியல்வாதிகள் ஏன் கோவிட் தடுப்பூசி போடுவதில்லை? அங்கன்வாடி பணியாளர்கள் ஆவேசம்

அரசியல்வாதிகள் யாரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போது, எங்களை மட்டும் குறிவைத்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு கட்டாயப்படுத்துவது ஏன் என அங்கன்வாடி பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசு உத்தரவுப்படி தமிழகம் முழுதும் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ள போதிலும் , கரூரில், அங்கன்வாடி பணியாளர்களைத் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாவட்ட அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாக அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் சுமார் 1400 பேர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள 140 அங்கன்வாடி பணியாளர்களை அலுவலக கூட்டம் நடப்பதாக வரவழைத்து அவர்களை வெளியே விடாமல், தடுப்பூசி போட்டுக் கொள்ள அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள்,தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துள்ளனர். இதை ஏற்றுக் கொள்ளாத அலுவலர்கள் கட்டாயப்படுத்தியும், எழுத்துப் பூர்வமாக வேண்டாம் என எழுதிக் கொடுக்குமாறு நிர்ப்பந்தம் செய்துள்ளனர் .பதிலுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் தடுப்பூசி போட்டால் எந்த பாதிப்பும் வராது என உறுதி அளித்து எழுத்துப் பூர்வமாக அதிகாரிகள் கொடுங்கள் எனக் கேட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருகிறது. தடுப்பூசி மீது முழு நம்பிக்கை இன்னும் ஏற்படவில்லை. இதனால் பக்கவிளைவு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் அந்நாட்டு அதிபர் மற்றும் அரசியல்வாதிகள் தான் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.ஆனால், தமிழகத்தில் அரசியல்வாதிகள் யாரும் போட்டுக்கொள்ளாமல் எங்களைக் குறிவைத்து பலிகடா ஆக்க நினைக்கிறார்களா என ஆவேசப்பட்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :