25 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு 10க்கும் குறைவு..

by எஸ். எம். கணபதி, Feb 20, 2021, 09:52 AM IST

பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிக்கவில்லை. 25 மாவட்டங்களில் புதிதாக 10க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 9 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவிய இந்த வைரஸ் நோய் ஆரம்பத்தில் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்குப் பாதித்தது. தினமும் 100, 200 பேர் இந்த நோய்க்குப் பலியாயினர். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நோய்ப் பரவுவது குறையத் தொடங்கியது. தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரிய பாதிப்பு இல்லை.

தமிழக அரசு நேற்று(பிப்.19) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 52 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 448 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 47,385 ஆக உயர்ந்தது.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 467 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 30,787 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 7 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,451 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4147 ஆக குறைந்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பரவல் நீடிக்கிறது. சென்னையில் நேற்று புதிதாக 136 பேருக்கும், கோவையில் 49 பேர், செங்கல்பட்டில் 46 பேருக்கும், திருவள்ளூரில் 31 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று புதிய பாதிப்பு எதுவும் இல்லை.

You'r reading 25 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு 10க்கும் குறைவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை