மர்மமான முறையில் இளைஞன் தூக்கு போட்டு தற்கொலை.. திருவண்ணாமலையில் பரபரப்பு..

by Logeswari, Feb 23, 2021, 20:35 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் மர்மமான முறையில் இளைஞன் தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்து புதுப்பாளையத்தில் வசித்து வருபவர்கள் அஜிஸ்-அம்ரின் தம்பதி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழைந்தைகள் உள்ள நிலையில் அம்ரினுக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த பூபதி என்பவருடன் செல்போன் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பூபதியை பொறுத்தவரை அம்ரின் கல்யாணமாகாத பெண் என்பதால் அவர் மேல் காதல் மோகம் மலர்ந்துள்ளது. இந்நிலையில் பூபதி தனது காதலியை நேரில் சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது அம்ரினுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்ற உண்மை பூபதிக்கு தெரியவர மிகவும் மனசு உடைந்துள்ளார். அம்ரினின் கணவன் ஊருக்கு சென்றதால் பூபதி அவரது வீட்டிலே இரண்டு நாட்களுக்கு தங்கியுள்ளார். இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூபதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் அம்ரின் புகார் அளித்துள்ளார். போலீஸ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தை பற்றி போலீஸ் அம்ரினிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You'r reading மர்மமான முறையில் இளைஞன் தூக்கு போட்டு தற்கொலை.. திருவண்ணாமலையில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை