வள்ளிமலை ஸ்ரீ முருகபெருமான் கோவிலின் பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடு
காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா பயங்கர கோலாகலத்துடன் தொடங்கியது. வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை ஸ்ரீ முருகபெருமான் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.
இதனிடையே இன்று தொடக்க நிகழ்ச்சியாக தேர் திருவீதி திருவிழா பக்தர்களின் முன்னிலையில் சிறப்பாக அரங்கேறியது. அப்பொழுது பக்தர்களின் அரோகரா அரோகரா என்ற முழக்கம் வீதிகள் முழுவதும் ஒலிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆந்திரா, கர்நாடக போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள்கள் கலந்து கொண்டு பொறி, மிளகு, காசுகள், பூ, பழம் என தங்களால் முடிந்த காணிக்கைகளை கடவுளுக்கு சாத்தி வழிபட்டனர்.
You'r reading வள்ளிமலை ஸ்ரீ முருகபெருமான் கோவிலின் பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடு Originally posted on The Subeditor Tamil
More Special article News