புளியமரம் சாய்ந்து குடிநீர் குழாய் உடைப்பு.. பொதுமக்கள் அவதி..
சோளிங்கர் அருகே புளியமரம் சாய்ந்து உடைந்த குடிநீர் பைப் லைனை சீர் செய்யும்மாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்ததால் அருகில் இருந்த குடிநீர் பைப்லைன் உடைந்து சாலையோரங்களில் நீர் வழிந்தோடியது. தண்ணீர் வீணாக சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பேரூராட்சி அலுவகத்தில் உடைந்த குடிநீர் பைப் லைனை உடனடியாக சீரமைத்து செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
You'r reading புளியமரம் சாய்ந்து குடிநீர் குழாய் உடைப்பு.. பொதுமக்கள் அவதி.. Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News
READ MORE ABOUT :