ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியை சீண்டிய ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கைது!

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

by Lenin, Apr 23, 2018, 13:33 PM IST

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்த 9 வயது சிறுமிக்கு பாஜக வழக்கறிஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பயணச்சீட்டு பரிசோதகரிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து ஈரோடு ரயில் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் சென்னையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரேம் ஆனந்த் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பிரேம் ஆனந்த் கடந்த 2006ம் ஆண்டும் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டவர் என்றும் தெரியவந்தது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியை சீண்டிய ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கைது! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை