6000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு... தமிழக அரசு மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது கொரோனாவில் இரண்டாவது அலை பரவி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் இன்று 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 26 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 1,977 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் தற்போது 37,673 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,952 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 76 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது.

6000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு நாட்கள் முன்பு அறிவித்த கட்டுப்பாடுகளில் சிலவற்றை திருத்தி மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் மெரினா போன்ற கடற்கரைகளுக்கு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செல்ல இனி தடை விதிக்கப்படுகிறது. இது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மூன்று மாவட்ட கடற்கரைகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபடலாம் என்றும் கூறப்பட்டுளள்து. முன்பு இது இரவு 8 மணி வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த விதித்த தடை தொடர்கிறது. இதேபோல், புதிதாக வெளியாகும் திரைப்படங்களை தியேட்டர்களில் கூடுதலாக ஒரு காட்சி திரையிடலாம் என்றும், புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு மட்டும் இந்த கூடுதல் காட்சி திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், இந்த திருத்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :