23 உயிர்களை காவு வாங்கிய குரங்கணி தீ விபத்தில் முக்கிய குற்றவாளி சரண்!

குரங்கணி தீ விபத்து சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி பீட்டர் வான் கெயிட் போடி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி தேனி மாவட்டம் போடி குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேறும் பயிற்சி மேற்கொண்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். மேலும் 14 பேர் சென்னை, மதுரை, ஈரோடு, கோவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

மொத்தம் 23 பேர் இறந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து தொடக்கத்தில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, காட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் பிரபு என்பவர் கொடுத்த புகார் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக மரணம் என போடி குரங்கணி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

பின்னர் இந்த வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டு அனுமதியின்றி மலையேறும் பயிற்சிக்கு அழைத்துச் சென்று மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக சென்னை டிரக்கிங் கிளப் நிறுவனரும் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவருமான மார்ஷல் மகன் பீட்டர் வான் கெயிட் (46), மேற்படி பிரபு மற்றும் தீ விபத்தில் இறந்த அருண் பிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பிரபு இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். முதல் குற்றவாளி பீட்டரை போலீசார் தேடி வந்தனர். இதில் பீட்டர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தார். இந்த மனு ஏப்ரல் 12 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்திரவிடப்பட்டது.

அதன் பேரில் புதன் கிழமையன்று பீட்டர் போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.மணிவாசகன் முன்னிலையில் சரணடைந்தார். இதனையடுத்து அவருக்கு இரு நபர்கள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds