கைதாவாரா எஸ்.வீ.சேகர்? - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

எஸ்.வீ.சேகர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் கைது செய்வதற்கும் தடை விதிக்கவும் மறுப்புத் தெரிவித்துள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக் கும்போது பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டினார். இதுதொடர்பாக வீக் வார இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார். காவல்துறையிலும் புகார் அளித்தார்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் இழிவான கருத்துகளை வெளியிட்டார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் சங்கங்களும் நடிகர் எஸ்.வி.சேகருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்த போதும் அவர் பார்வேர்டு செய்த தகவல் மிகவும் கடுமையானது. எனவே தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் பத்திரிகையாளர்கள் காவல்துறையில் புகார் செய்தனர்.

சென்னை மற்றும் மதுரை, கோவை ஆணையர் அலுவலகத்திலும் பத்திரிகைகயாளர்கள் மற்றும் மாதர் சங்கத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எஸ்.வீ.சேகருக்கு முன் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, பத்திரிகையாளர்கள் பலர் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

எஸ்.வீ.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் குவிந்து வருகிறது. மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற வெகுஜன இயக்கங்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்து மனு செய்துள்ளன.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைப்பதாகவும், கோடைக்கால அமர்வு இந்த முன் ஜாமீன் கோரிய மனுவை விசாரிக்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.

அது வரை எஸ் வி சேகரை கைது செய்யாமல் இருக்க காவல்துறைக்கு உத்தரவிட எஸ்.வி.சேகர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். பொதுவாக நான் இது போன்ற உத்தரவிடுவதில்லை என்று கூறிய நீதிபதி ஜெகதிஷ் சந்திரா கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds