முதல்வரின் கருத்து என்னை காயப்படுத்தி விட்டது - உலக அழகி வேதனை
திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேபின் கருத்து, தன்னை காயப்படுத்தி விட்டதாக உலக அழகி டயானா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு திரிபுரா பாஜக முதல்வர் பிப்லப் குமார் தேப், “ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, ஆனால், டயானா ஹெய்டனுக்கு எதற்காக உலக அழகிப்பட்டம் கொடுத்தார்கள்?” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
அவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வருக்கு இதுதான் வேலையா? என்று நெட்டிசன்கள் வருத்தெடுத்தனர்.
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள உலக அழகி டயானா, “நாம் இந்தியர்கள், நமது தோல் நிறம் பழுப்பு; அந்த வகையில் அழகான, கவர்ச்சியான பழுப்பு நிறம் எனக்கு பெருமையே. பிப்லப் குமார் தேபின் கருத்து, தன்னை காயப்படுத்தி விட்டது” என்று கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading முதல்வரின் கருத்து என்னை காயப்படுத்தி விட்டது - உலக அழகி வேதனை Originally posted on The Subeditor Tamil
More Akkam pakkam News