தமிழர்கள் அடிபணிய மாட்டார்கள்- மோடியைத் தாக்கும் ராகுல்!
’மோடியின் தோட்டாக்கள் தமிழர்களை நசுக்க முடியாது’ என சீறியுள்ளார் ராகுல் காந்தி.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் கடந்த நூறு நாள்களாக விடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் போராடும் மக்களை ஒடுக்க தமிழகக் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில் 10 பேர் பலியாகினார். பலர் காயமடைந்தனர். போராட்டத்தைக் கலவரமாக அறிவித்த அரசு தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விதித்துள்ளது. இதன் பின்னரும் மக்கள் போராட்டம் ஓயவில்லை.
தொடர்ந்து தூத்துக்குடியிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், மோடிக்கு எதிராகவும் தமிழக மக்களின் உணர்வுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, “தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என தமிழிலேயே ஆதரவு அளித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading தமிழர்கள் அடிபணிய மாட்டார்கள்- மோடியைத் தாக்கும் ராகுல்! Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News