இணைய சேவை முடக்கம்: பி.இ., விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!
தமிழகத்தின் மூன்று தென் மாவட்டங்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டதை அடுத்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் கடந்த நூறு நாள்களுக்கும் மேலாக விடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் நூறாவது நாளன்று தூத்துக்குடியில் போராடும் மக்களை ஒடுக்க தமிழகக் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில் 10 பேர் பலியாகினார். பலர் காயமடைந்தனர். போராட்டத்தைக் கலவரமாக அறிவித்த அரசு தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விதித்துள்ளது. இதன் பின்னரும் மக்கள் போராட்டம் ஓயவில்லை.
தொடர்ந்து தூத்துக்குடியிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், மீண்டும் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடில் போலீஸ் ஈடுபட்டது. அதில் இன்று இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் மத்தியில் தேவையில்லாத வதந்திகள் பரவுவதால்தான் குழப்பம் நிலவுவதாக தமிழக உள்துறை அமைச்சகம் இணைய முடக்கத்தை அறிவித்தது. இதன் அடிப்படையில் வருகிற 27-ம் தேதி வரையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவையை முடக்குவதாக தமிழக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்போருக்கான இறுதி நாளை ஒத்திவைத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். கூடுதலாக மூன்று நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளthu. மே 30-ம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான நிறைவடைகிறது. தற்போது 3 நாள் அவகாசத்தால் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading இணைய சேவை முடக்கம்: பி.இ., விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு! Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News