தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
உள் மாவட்டங்களில் மழை பெய்யும்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல்பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதே போல் தமிழக உள் மாவட்டங்களில் ஓர் இரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், வங்ககடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக குளச்சலில் இருந்து கீழக்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக பகுதிகளில் நாளை இரவு வரை 6 அடி முதல் 9அடி ராட்சத அலைகள் எழும் எனவும், தென்தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்கு செல்லும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News