ரயில் பெட்டியில் துப்பாக்கி குண்டுகள்... சென்ட்ரலில் பரபரப்பு

ரயில் பெட்டியில் துப்பாக்கி குண்டுகள்

by Radha, Jun 16, 2018, 21:39 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் பெட்டியில் துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

central railway station

கேரள மாநிலத்தில் இருந்து சென்னைக்கு திருவனந்தபுரம் விரைவு ரயில் வந்தது. பயணிகள் இறங்கிய பிறகு ரயில் பெட்டிகள் சுத்தம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.

பி2 கோச்சை சுத்தம் செய்தபோது, சந்தேகத்திற்கு இடமாக ஒரு பொட்டலம் இருந்துள்ளது. அதை துப்புரவு ஊழியர்கள் பிரித்து பார்த்துள்ளனர்.

துறு பிடித்த நிலையில் 3 குண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிக்காத நிலையில் இருந்த அந்த குண்டுகளை போலீசார் கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், குறிப்பிட்ட அந்த ரயில் பெட்டியில் ராணுவ வீரர்கள் பயணித்தது தெரியவந்துள்ளது. ராணுவ வீரர்கள் அந்த குண்டுகளை விட்டு சென்றனரா? அல்லது வேறு யாரும் போட்டு சென்றனரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading ரயில் பெட்டியில் துப்பாக்கி குண்டுகள்... சென்ட்ரலில் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை