ஆர்.டி.ஓ அலுவலகங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

by Isaivaani, Jun 29, 2018, 17:43 PM IST

தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வட்டராங்களின் அடிப்படையில் ஏராளமான ஆர்.டி.ஓ அலுவலகங்கள் உள்ளது. வாகனங்களுக்கு எண் பதிவு முதல் லைசன்ஸ் வாங்குவது வரை அனைத்து பணிகளும் இங்கு நடைபெறும். ஆனால், இந்த அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

விசாரணையில் முடிவில் நீதிபதிகள், “தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தங்களது சொத்து கணக்குகளை போக்குவரத்து துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

You'r reading ஆர்.டி.ஓ அலுவலகங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை