நாகையில் நரபலியா? கோவில் குளத்தில் கிடந்த குழந்தை எலும்புகள்

Human sacrifice in Nagapattinam? Baby bones in the temple pond

by Manjula, Oct 29, 2018, 13:43 PM IST

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கோவில் குளத்தில் எரிந்த நிலையில் கிடந்த குழந்தை எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் பால்குளத்து வீரன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவில் குளத்தின் படிக்கட்டில் எரிந்த நிலையில் எலும்புகள் கிடப்பதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு, சென்று ஆய்வு செய்ததில் எரிக்கப்பட்டு கிடந்தவை குழந்தை எலும்புகள் என தெரியவந்தது. கோவில் குளத்தில் நரபலிக்காக குழந்தை எரிக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You'r reading நாகையில் நரபலியா? கோவில் குளத்தில் கிடந்த குழந்தை எலும்புகள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை