ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம்: தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம்

அடையாறு கூவம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனமாக இருந்ததால் தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு, கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் ஆக்கிரமதிப்புகளை அகற்றவும், பல்வேறு தொழிற்சாலைகள் கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தீர்ப்பாய தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடையாறு, கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதற்கு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் அவர் வெளியிட்ட உத்தரவில், தமிழக அரசின் பொதுப்பணித் துறை, முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கை தெளிவற்று இருப்பதால், இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருப்பது உறுதியாகி உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாகவே நடந்துள்ளது.

நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு கூறும் காரணத்தை ஏற்க முடியாது. எனவே, சுற்றுச்சூழல் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, அடையாறு, கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்பு அகற்றம், மாசு ஏற்படுவதை தடுக்கும் பணிகளை தமிழக அரசின் தலைமை செயலாளர் நேரடியாக பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தன்மாக இருந்த தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை பொதுப்பணித்துறை அடுத்த 15 நாட்களில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds