பண மோசடியால் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தல்: மனைவி மீட்பு-7 பேர் கைது

வாங்கிய பணத்தை திரும்ப தராததால், பவர் ஸ்டார் மற்றும் அவரது மனைவியை கடத்திய கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழில் லத்திகா உள்ளிட்ட படங்கள் மூலம் ஹீரோவான பவர் ஸ்டார் சீனிவாசன், பின்னர், முன்னணி ஹீரோக்களுடன் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி தனது கணவரை கடத்திவிட்டதாக அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நிலம் பதிவு செய்வது தொடர்பாக தான் ஊட்டிக்கு வந்ததாக பவர் ஸ்டார் தெரிவித்தார். மேலும், தான் இரண்டு நாட்களில் வீடு திரும்பிவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மேற்கொண்டு நடத்திய விசாரணையில் புகார் தெரிவித்த பவர் ஸ்டாரின் மனைவி ஜூலியும் ஊட்டிக்கு சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்நிலையில், இன்று சென்னை திரும்பிய பவர் ஸ்டார் சீனிவாசன், தன்னை கடத்திவிட்டதாகவும், மனைவி ஜூலியை அவர்கள் பிணை கைதியாக வைத்துள்ளதாகவும் கோயம்பேடு போலீசில் புகார் தெரிவித்தார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் இதுகுறித்து மேற்கொண்டு கூறியதாவது: கடந்த 3ம் தேதி சினிமா பிஆர்ஓ ப்ரீத்தி ஒரு படத்திற்கு 10 நாட்கள் கால்ஷீட் ரூ.10 லட்சம் அட்வான்ஸ் தருவதாகவும், இதுகுறித்து பேச கோயம்பேட்டில் உள்ள தனியார் ஓட்டலுக்கு தயாரிப்பாளர் அழைத்துள்ளார் என்றும் கூறினார். இதை நம்பி, கோவையில் இருந்து சென்னை வந்தேன். ப்ரீத்தியை ஒரு ஓட்டல் அறையில் சந்தித்தேன். சிறிது நேரத்தில் தயாரிப்பாளர் செல்வின் வந்தார். அவருடன் ஸ்டன்ட் யூனியனை சேர்ந்த ஒருவர் வந்தார்.

இவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மற்றொரு 7 பேர் வந்தனர். வக்கீல் என்று கூறியநிலையில், அவர்கள் இரண்டு செல்போன்களையும் பறித்தனர். பின்னர் என்னை தரையில் அமர வைத்து அநாகரீகமாக நடந்துக் கொண்டனர்.

அப்போது, நீங்கள யார் ? என்ன வேண்டும என்று கேட்டதற்கு ஆலம் யார் என்று தெரியுமா என கேட்டனர். தெரியும், அவருக்கு நான் 90 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என்று கூறினேன்.

ஆனால், அந்த பணத்தை உடனே தர வேண்டும் என்று மிரட்டினர். இதனால், ஊட்டியில் இருக்கும் வீட்டை எழுதி தருவதாக கூறினேன். பின்னர், தன்னை செங்கல்பட்டுக்கு அழைத்து சென்று பின்னர் அண்ணா நகர் அழைத்து வந்து ஊட்டிக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

என் மனைவியின் பெயரில் உள்ள வீடு என்பதால் அவளது கையெழுத்து வேண்டும் என கூறினேன். இதனால், கடந்த 6ம் தேதி எனது மனைவி ஜூலியையும் ஊட்டிக்கு வரவழைத்தனர். இதற்கிடையே தான் ஜூலி போலீசில் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், ஊட்டிக்கு வந்த ஜூலியையும் பிடித்து வைத்தனர். இதன்பிறகு, தனது குழந்தைகள் தனியாக இருப்பதாகவும், அவர்களை பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடுவதாகவும் கூறி அவர்கள் வழங்கிய காகிதங்களில் கையெழுத்திட்டு சென்னை வந்து முதல்வேலையாக போலீசில் புகார் தெரிவித்தேன். பிணை கைதியாக உள்ள தனது மனைவியை மீட்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக ஊட்டிக்கு விரைந்து ஜூலியை மீட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds