குட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை- அடுத்தது கைது?

குட்கா ஊழல்: விஜயபாஸ்கரை 'தூக்குகிறது’ சிபிஐ! பி.ஏ. சரவணன் சரண்!

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளிடம் இன்று ரகசியமாக விசாரணைக்கு ஆஜரானார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரிடம் 8 மணிநேரம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்யும் முடிவில் சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக நாம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட குட்கா போதை பாக்குகளை தமிழகத்தில் தாராளமாக விற்பனை தயாரிப்பாளர் மாதராவிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கினர் என்பதை முதலில் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது.

ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றமும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

சிபிஐ அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சில நாட்கள் முன்பு விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல விஷயங்களை சரவணன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து விஜயபாஸ்கரை விசாரித்து கைது செய்யும் முடிவுக்கு வந்தது சிபிஐ.

இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் ரகசியமாக சிபிஐ விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் 8 மணிநேரமாக கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணாவும் இன்றைய விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds