நாளை முதல் 6 நாளில் ஒரு நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும் ! மக்களே

Six days Bank leave due to protest

by Mathivanan, Dec 20, 2018, 13:44 PM IST

உஷாராயிடுங்க ! அடுத்தடுத்து வரும் விடுமுறை மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் நாளை முதல் அடுத்த 6 நாட்களில் ஒரு நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும்.

ஏ.டி.எம்களும் முடங்கும் என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே உஷாராக இருப்பது நல்லது. பல்வேறு கோரிக்கைகளுக்காக வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் நாளை ( 21-ந் தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வங்கிப் பணிகள் முடங்கும். நாளை மறுதினம் நான்காவது சனிக்கிழமை மற்றும் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.

24-ந் தேதி திங்கட்கிழமை மட்டும் வங்கிகள் செயல்படும். 25-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை . அடுத்த நாள் 26-ந்தேதி வங்கி ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளதால் அன்றும் வங்கிகள் செயல்படாது. இதனால் அடுத்து வரும் 6 நாட்களுக்கும் ஏ.டி.எம் களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே திண்டாட்டத்தை தவிர்க்க இப்போதே கையில் போதிய பணத்தை வைத்துக் கொள்ள உஷாராயிருங்க மக்களே.

You'r reading நாளை முதல் 6 நாளில் ஒரு நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும் ! மக்களே Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை