பெண்களுக்காகவே ஐயப்பன் கோயிலை கட்டுவோம் - சீமான் அதிரடி

Seeman slams Hindutva outfits on sabarimala

by Mathivanan, Jan 4, 2019, 10:36 AM IST

கோயிலுக்கு பெண்கள் செல்லக் கூடாது என்று சொல்பவர்கள் முட்டாப் பயலுகள்..... அயோக்கியர்கள் ... ஈனப் பிறவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளர் கடுமையாக சாடியுள்ளார். மேலும் பெண்கள் மட்டுமே தரிசிக்கும் வகையில் தனியாக ஐயப்பன் கோயிலை கட்டுவோம் என்ற சீமானின் அதிரடிப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், அதற்கு பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகளின் எதிர்ப்பாலும் சர்ச்சையாகிக் கிடக்கிறது இந்த விவகாரம். இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் விமர்சனப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், பெண்களைப் புனிதமாகப் போற்றும் நாட்டில் அவர்களை ஐயப்பன் கோயிலுக்கு செல்லக் கூடாது என்பவர்கள் முட்டாள், கிறுக்கன், அயோக்கியன், ஈனப் பிறவி என விளாசுகிறார் சீமான். பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று வழக்கும் போட்டு, தீர்ப்பையும் சாதகமாக வாங்கி விட்டு இப்போது எதிர்த்தும் போராட்டம் நடத்துவதாக பா.ஜ.க. வை ஏகமாக வசைபாடியுள்ளார்.

இப்படியே போனால் பெண்கள் மட்டுமே வழிபடும் ஐயப்பன் கோயிலை தனியாக கட்டுவோம் என்றும் சீமான் பேச்சில் அதிரடி காட்டியுள்ளது வைரலாகியுள்ளது.

You'r reading பெண்களுக்காகவே ஐயப்பன் கோயிலை கட்டுவோம் - சீமான் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை