கடலூர் பரந்தாமனைக் கொன்றது யார்? காதலுக்காக புனே வரை நீண்ட ஆணவக் கொலை

Who killed Cuddalore Paranthaman?

by Mathivanan, Jan 5, 2019, 16:13 PM IST

புனேவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கடலூர் தலித் இளைஞர் மரணத்தில் நீதி விசாரணை கோரிக்கையை முன்வைத்துள்ளன தனியார் அமைப்புகள். காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறலாம் எனவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மதுரை எவிடென்ஸ் கதிர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவலைக் குறிப்பிட்டிருக்கிறார். அவரது அறிக்கை பின்வருமாறு:

புனேவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கடலூர் தலித் இளைஞர் மரணத்தில் நீதி விசாரணை கோரிக்கையை முன்வைத்துள்ளன தனியார் அமைப்புகள். காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறலாம் எனவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மதுரை எவிடென்ஸ் கதிர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவலைக் குறிப்பிட்டிருக்கிறார். அவரது அறிக்கை பின்வருமாறு:

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள இறையூர் கிராமத்தில் வசிப்பவர் சபாபதி. தலித் சமூகத்தைச் சேர்ந்த சபாபதியின் மகன் பரந்தாமன் (26). கடந்த 8 மாதத்திற்கு முன்பு பரந்தாமனுக்கும் உசிலம்பட்டி அருகில் உள்ள முத்தையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்கசாதி பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டாரின் குடும்பத்தினரும் உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் பெண்ணின் தரப்பினர் தனது மகளை பரந்தாமன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாகவும் தனது மகள் 18 வயது பூர்த்தியடையாதவர் என்றும் வழக்கு தொடுத்திருந்தார்.

போலீசார் காதல் தம்பதியினரை தேடி அலைந்தனர். பரந்தாமனின் தந்தை உள்ளிட்ட உறவினர்களை கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான தம்பதியினர் தாங்கள் இருவரும் மேஜர் என்று தெரிவித்தனர்.

ஆனால் பெண்ணின் தரப்பினர் பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று பள்ளிக்கூட சான்றிதழ் ஒன்றினை நீதிமன்றத்தில் சமர்பிக்க, அந்த பெண்ணோ நான் இதுவரை பள்ளிக்கூடமே சென்றதில்லை என்று தெரிவித்தார். அந்த பெண்ணின் ஆதார் அட்டையில் 18 வயது பூர்த்தியடைந்திருப்பது தெரிய வந்தது.

ஆயினும் ஆவணங்கள் சரியில்லாததால் நீதிமன்றம் அந்த பெண்ணை காப்பகத்தில் வைக்க உத்தரவிட்டது. இதற்கிடையில் மருத்துவ பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட மருத்துவ பரிசோதனையில் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகத்துடன் அறிக்கை கொடுத்தனர்.

இதற்கிடையில் பரந்தாமன் நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் அடைக்கப்பட்டார்.

பரந்தாமன் 69 நாள் சிறைவாசத்துக்கு பிறகு கடந்த 25.12.2018 அன்று நிபந்தனை பிணையில் வந்தார்.

கடந்த 28.12.2018 முதல் 02.01.2019 வரை உசிலம்பட்டி அருகில் சிந்துபட்டி காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்திருக்கிறார்.

இதற்கிடையில் 04.01.2019 அன்று காலை மகாராஸ்டிரா மாநிலம், புனே அருகில் ஒரு தனியார் விடுதியில் தூக்குமாட்டியவாறு பரந்தாமன் இறந்து கிடந்திருக்கிறார்.

இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று பரந்தாமனின் தந்தை சபாபதி எமது எவிடன்ஸ் குழுவினரிடம் தெரிவித்தார். பூனேவில் உள்ள எவிடன்ஸ் அமைப்பின் தன்னார்வலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தற்கொலைக்கு முன்பு ஒரு தற்கொலை கடிதத்தையும் பரந்தாமன் எழுதி வைத்திருந்திருக்கிறார். அந்த கடிதத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்துவிட்டு, தனக்கு பெண்ணின் குடும்பத்தால் ஏற்பட்ட மிரட்டல்களையும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் பதிவு செய்திருக்கிறார்.

பரந்தாமனின் குடும்பத்தினர் எவிடன்ஸ் அமைப்பின் இயக்குனர் கதிரிடம் தொடர்பு கொண்டு, ஐயா இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. இது கொலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கேட்டுக் கொண்டனர். தற்போது பூனே அருகில் உள்ள அரசு மருத்துவனையில் பிணக்கூறாய்வு நடக்க இருக்கிறது.

எவிடன்ஸ் அமைப்பு இதுகுறித்து களஆய்வு செய்து வருகிறது.

பரந்தாமனையும் அவரது குடும்பத்தினரையும், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் போலீசாரும் கடுமையாக அச்றுத்தி இருக்கின்றனர். நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பு காவல்நிலையத்திற்கு சென்ற பரந்தாமன் மீது அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

கடந்த 4 மாத காலமாக பரந்தாமன் கடுமையான மனஉளைச்சலுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகி வந்துள்ளனர். ஆகவே இது கொலையா? தற்கொலையா? என்பதை போலீசார் விசாரணை செய்ய வேண்டும். எதுவாகினும் அவரது மரணத்திற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் தான் முக்கிய குற்றவாளி.

தற்கொலை கடிதத்தின் முக்கிய குறிப்புகள்

1. போலீசார் என்னை கைது செய்து 11.10.18 அன்று என்னை மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து காலை 10 மணியளவில் போலீசார் பிடித்தனர். ஆனால் என்னை தாமதமாகவே ரிமாண்ட் செய்தனர். அதுவரை காசிமாயன் மற்றும் முருகன் என்ற இருவர் என்னை காவல்நிலையத்தில் வந்து அடித்தனர்.

2. சிறையில் இருந்து டிஎன்ஏ பரிசோனைக்கு கொண்டு செல்ல சிந்துபட்டி காவலர்கள் ராகவன் மற்றும் சின்னச்சாமி ஆகியோர் வந்தனர். அவர்கள் என்னை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர். மருத்துவமனைக்கு செல்லாமல் சிவானியின் மாமன் சிவச்சந்திரன் (ஓட்டுனர்), காசிமாயன் ஆகிய இருவரிடமும் ஒப்படைத்தனர். அவர்கள் எனது டிசர்ட்டை கிழித்தும் கன்னத்தில் அறைந்தும் துன்புறுத்தினர். அதன்பிறகே இவர்கள் என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதை வெளியில் சொன்னால் எனது தம்பியை கொன்றுவிடுவதாக மிரட்டினர்.

3. எனது மனைவியின் நெருங்கிய உறவினர் உசிலம்பட்டி எம்எல்ஏ, நீதிபதி அவர்கள் அவரின் அரசியல் செல்வாக்கை மருத்துவ பரிசோதனையில் 18 வயதாவதற்கு 4 மாதம் உள்ளது போல் தயார் செய்துவிட்டனர்.

4. எங்கள் காதல் கல்யாண விவகாரத்தில் சிவானியின் தந்தை மற்றும் அண்ணன் வெண்டிமுத்து, மாமன்கள் காசிமாயன், சிவசந்திரன், சதிஸ், முருகன் ஆகியோர் எத்தனையோ முறை எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

5. சிந்துபட்டி காவல்நிலைய ஆய்வாளர் அன்னமயில், திருமங்கலம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி ஆகிய இருவரும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். சிவானியின் தந்தையிடம் பல லட்சங்கள் லஞ்சமாக பெற்றுள்ளனர்.

பரிந்துரைகள்

• பரந்தாமனின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

• பரந்தாமனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.

• இந்த வழக்கினை தமிழகத்திற்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• இவ்வழக்கினை சிபிசிஐடி விசாரணை செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

You'r reading கடலூர் பரந்தாமனைக் கொன்றது யார்? காதலுக்காக புனே வரை நீண்ட ஆணவக் கொலை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை