இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவரை அந்நாட்டு பாதுகாப்பு படையின் சுட்டுக் கொன்றனர்.

இலங்கை தலைநகர் கொழும்பு புறநகர் பகுதியில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலால் அந்நாடே நிலைகுலைந்து போயுள்ளது.ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கர குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் தான் காரணம் என்பது தெரிய வந்து, நாடு முழுவதும் தீவிரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மனித குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது இலங்கை அரசு.

இந்நிலையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகப்படும் நபர்கள் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இறுதியில் தீவிரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் அப்பாவி பொதுஜனம் ஒருவரும் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கல்: பீதியை கிளப்பிய லாரி டிரைவர் கைது

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds