இலங்கையில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் 15 சடலங்கள் வெடிமருந்து குவியலும் கண்டுபிடிப்பு

இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் அந் நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டைக்குப் பின் அந்த வீட்டில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சண்டையிலும் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமான வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புக்கு கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள கல்முனை அருகிலுள்ள கம்மன் துறை என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்றிரவு சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டிற்குள் 3 முறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டதுடன், உள்ளிருந்து, பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியாலும் சரமாரியாக சுட்டனர்.

இதனால் நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டமாக முதலில் தகவல் வெளியானது.

தற்போது துப்பாக்கிச் சண்டைக்குப் பின் அந்த வீட்டில் சோதனை நடத்திய போது 6 குழந்தைகள் உள்பட 15 பேரின் சடலங்கள் சின்னாபின்னமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் அந்த வீட்டில் வெடி மருந்துகள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிமருந்து களுடன் 150 ஜெலட்டின் குச்சிகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு சிறு இரும்பு குண்டுகள், மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஆடைகள், சீருடைகள் மற்றும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கொடிகள் உள்ளிட்டவை டெடுக்கப்பட்டதாக இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததும், வீட்டிற்குள் இருந்தவர்கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும், இறந்த 15 பேரில் தற்கொலைப்படையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கி சண்டையிலும் 4 பயங்கரவாதிகளுடன் அப்பாவி பொது ஜனம் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இந்திய அணிக்காக வெற்றி தேடி தர வேண்டும்... வேகப்பந்து வீச்சாளர் விருப்பம்...

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds