கொரோனா நோய்க்கு ஸ்பெயின் இளவரசி பலி..

Princess Maria Teresa of Spain has died aged 86 after testing positive for coronavirus.

by எஸ். எம். கணபதி, Mar 29, 2020, 12:33 PM IST

கொரோனா பாதித்திருந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

உலகம் முழுவதும் சீன வைரஸ் நோயான கொரோனா பரவியிருக்கிறது. அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இந்நோய்க்கு 7 ஆயிரம் பேர் வரை மரணமடைந்து விட்டனர். ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது.

இந்நிலையில், ஸ்பெயினில் போர்பன் இளவரசி மரியா தெரசாவுக்கு(86) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார். இதை அவரது சகோதரர் சிக்ஸட்டஸ் ஹென்றி தெரிவித்தார். மரியா தெரசா- சேவியர் தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

ஸ்பெயினில் தற்போது வரை கொரோனாவுக்கு 5690 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

You'r reading கொரோனா நோய்க்கு ஸ்பெயின் இளவரசி பலி.. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை