பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல சதியா...?

by Isaivaani, Dec 6, 2017, 12:27 PM IST
பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
 
 
 
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வரும் தெரசா மே, லண்டன் நகரிலுள்ள டவுனிங் தெருவில் வசித்து வருகிறார். அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச்செய்து இவரை கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் போலீசார் வெளியிட்டு அறிக்கையில், கடந்த 28ஆம் தேதி தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜகரியா ரெஹ்மான், முகமது அகீப் இம்ரான் ஆகிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் தெரியவந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் தெரசா மேயின் செய்தி தொடர்பாளர், கடந்த 12 மாதங்களில் 9 சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். 

You'r reading பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல சதியா...? Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை