பாகிஸ்தானிய பெண் ஊடகவியலாருக்கு இந்தியாவில் தடை - மகன் கோபம்

புதுடெல்லியில் மே 10, 11 தேதிகளில் 15வது ஆசிய ஊடக மாநாடு நடந்தது. ஆசிய பசிபிக் தகவல் ஒளிபரப்பு மேம்பாட்டு கல்வி நிறுவனத்துடன் இந்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற பாகிஸ்தானிய புகழ்பெற்ற கவிஞர் ஃபைஸ் அஹமது ஃபைஸின் மகளும் பாகிஸ்தானிய ஊடகவியலாருமான 72 வயது மோனிஸா ஹஸ்மி அழைக்கப்பட்டிருந்தார்.

ஹஸ்மி, மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தபோது, மாநாட்டை ஏற்பாடு செய்த நிறுவனத்தினர், அவர் மாநாட்டில் உரையாற்றவோ, பங்குபெறவோ அனுமதி இல்லை என்று கூறியதாகவும், எத்தனையோ முறை காரணத்தை கேட்டும், சரியான பதில் கூறப்படவில்லை என்றும் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறியுள்ளார்.

இந்தியா, இந்த மாநாட்டை நடத்துவது இதுவே முதன்முறை. பல்வேறு நாடுகளிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் 54 பேர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இணைந்து நடத்திய இம்மாநாட்டில் அரசின் நிறுவனமான பிரசார் பாரதி பங்கேற்கவில்லை.

இது பற்றி இந்திய அரசின் வெளியுறவு துறையிலிருந்து அதிகாரப் பூர்வ கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஹஸ்மி பார்வையாளர் விசாவில் வந்தததாகவும், மாநாட்டில் பங்குபெற வேண்டுமானால், கருத்தரங்குக்கான கான்ஃபரன்ஸ் விசா இருக்க வேண்டும் என்றும் அவ்வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தான் அழைக்கப்பட்டபோது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இப்படி ஒரு நடைமுறை இருப்பதை தனக்கு தெரியப்படுத்தவில்லை என்றும், அந்த விசாவை பெறுவதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ள ஹஸ்மி, இதுவரை தான் பத்துக்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களில் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

"வெளிநாட்டிலிருந்து கருத்தரங்கத்தில் பங்கேற்க வருபவரிடம் இப்படியா நடந்து கொள்வது?" என்று வேதனை தெரிவித்த அவர், "இனியும் இந்தியாவிலிருந்து கருத்தரங்களில் பங்கேற்க அழைப்பு வந்தால் கலந்து கொள்வேன்," என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து, ஹஸ்மியின் மகன் அலி ஹஸ்மி, "ஃபைஸின் மகளான 72 வயதான என்னுடைய தாயாருக்கு, முறையான அழைப்புக்குப் பிறகு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதான் உங்கள் ஒளிரும் இந்தியாவா? வெட்கம்" என்று பிரதமர் அலுவலகத்துக்கும், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds