இங்கிலாந்தில் சோகம்-போதையில் தாய் துடிதுடித்து இறந்த குழந்தை!
இங்கிலாந்தில் மூச்சுத்திணறி குழந்தை இறப்பது கூட தெரியாமல் போதையில் இருந்த தாய் மீது வழக்குப் பதிவு.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டேசி அட்கின்சன் என்ற பெண்மணி மது அருந்திவிட்டு போதையில் தூங்கியுள்ளார். அப்போது அவரின் ஏழு மாதக்குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
மூச்சுத்திணறலில் குழந்தை துடிதுடித்துக் கொண்டிருந்த நிலையில் ஸ்டேசி போதை மயக்கத்தில் இருந்ததால் அவரின் குழந்தை மயங்கி பரிதாபமாக உயிரிழந்தது.
இதைத் தொடர்ந்து, குழந்தையை கவனித்துக் கொள்வதில் அலட்சியமாக இருந்ததாக தெரிவித்து இங்கிலாந்து போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்டேசிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது.
You'r reading இங்கிலாந்தில் சோகம்-போதையில் தாய் துடிதுடித்து இறந்த குழந்தை! Originally posted on The Subeditor Tamil
More World News