May 1, 2020, 13:52 PM IST
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியிட வசதியாக வரும் 21ம் தேதியன்று சட்டமேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 9 காலியிடங்களுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. Read More
May 1, 2020, 11:23 AM IST
மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிகர் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்தார். கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருக்கும் மஞ்சு தன்னை பிஸியாக வைத்திருப்பதற்காக நடனம் ஆடி தொடர்ந்து பயிற்சி செய்கிறார். தனது இணைய தள பக்கத்தில் குச்சிப்புடி நடனம் ஆடும் புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். Read More
May 1, 2020, 10:35 AM IST
கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பு பெற்ற கேஜிஎப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் யஷ். இவர் தற்போது கேஜிஎப் 2ம் பாகம் நடித்து வருகிறார். இவரது மனைவி ராதிகா பண்டிட் இவர்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் 2வது குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் படத்தை வெளியிடாமல் வைத்திருந்தனர். Read More
May 1, 2020, 10:31 AM IST
தல அஜீத்திற்கு இன்று (மே 1) பிறந்தநாள். கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். எனவே தனது பிறந்த நாளன்று கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என ஏற்கனவே அஜீத் கேட்டுக் கொண்டார், இதையடுத்து அவரது ரசிகர்கள் அடக்கி வாசிக்கின்றனர். Read More
May 1, 2020, 10:26 AM IST
பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. இவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்தனர். ரிஷியின் மகள் ரித்திம்மா திருமணம் ஆகி டெல்லியில் வசிக்கிறார். கொரோனா ஊரடங்கால் அவர் உடனடியாக விமானத்தில் புறப்பட்டு மும்பை வரமுடியாத நிலை இருந்தது. Read More
May 1, 2020, 10:23 AM IST
நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் உயிர்க் கொல்லி நோயான கொரேனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
May 1, 2020, 10:20 AM IST
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டமேலவை உறுப்பினராகும் வகையில் 9 காலியிடங்களுக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்கிறது. Read More
May 1, 2020, 10:16 AM IST
வெளிமாநிலங்களுக்குச் சரக்குகளைக் கொண்டு செல்லும் லாரிகளை தடுக்காமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 1, 2020, 10:13 AM IST
தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாகத் தளர்த்த வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்தார்தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்தது. Read More
May 1, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More