Jul 17, 2019, 15:18 PM IST
நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை மத்திய அரசிடம் கேட்ட பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். Read More
Jul 17, 2019, 11:44 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தண்ணீர் திறப்பது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jul 16, 2019, 15:49 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 16, 2019, 15:38 PM IST
தபால்துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து 4 முறை ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 16, 2019, 14:35 PM IST
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லுடன் அம்மாவின் ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டசபையில் திமுக உறுப்பினர் பூங்கோதை பேசினார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘‘என்றைக்குமே எங்கள் மம்மி ஆட்சிதான்’’ என்று பதில் கொடுத்தார். Read More
Jul 13, 2019, 12:00 PM IST
சென்னைக்கு ரயிலில் கொண்டு வரும் தண்ணீ்ர் பத்து சதவீத தேவையைக் கூட பூர்த்தி செய்யவில்லை. 12 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீர் விலை இப்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. Read More
Jul 10, 2019, 10:23 AM IST
தமிழகத்தில் ஏழைப் பெண்களுக்கு 10 ஆடுகளும், ஒரு கிடாவும் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Jul 8, 2019, 17:47 PM IST
மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Jul 8, 2019, 08:42 AM IST
பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் இன்று மாலை அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. Read More
Jul 6, 2019, 11:18 AM IST
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்து விட்டது. தமிழகத்திலும் இதை நிறைவேற்றும் வகையில் பிராமணர் உள்பட முன்னேறிய வகுப்பினருக்கும் ஜாதிச் சான்றிதழ் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More