Aug 10, 2019, 21:14 PM IST
ஜம்மு -காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அம்மாநில மக்களின் கருத்தை கேட்டறிய அனைத்துக் கட்சிகளின் குழுவை உடனே அனுப்ப வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Aug 7, 2019, 13:13 PM IST
கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மற்றும் பல்வேறு தலைவர்களும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். Read More
Aug 6, 2019, 09:43 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை நீக்கியதற்கு இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்னையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறது. Read More
Aug 5, 2019, 14:29 PM IST
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதும், சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்வதும், தெற்கு சூடான், கொசாவோ போன்ற நாடுகள் அழிந்தது போல், காஷ்மீரையும் அழிக்கச் செய்யும் முயற்சி என்றும், நாட்டில் அவசர நிலையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்றும் மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார். Read More
Aug 3, 2019, 22:47 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதிக்கட்டமாக இன்று மாலை நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி களின் தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த ஒரு மாத காலத்தில் இந்தத் தொகுதியில் ரூ.3.57 கோடி பணம், பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More
Aug 2, 2019, 09:22 AM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். Read More
Jul 31, 2019, 11:25 AM IST
தமிழ் மொழியை புறக்கணித்து விட்டு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்தத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறும் என்று தபால்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jul 27, 2019, 12:03 PM IST
பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தில் தமிழ்மொழியின் தோற்றம் குறித்து தவறான தகவல் இடம் பெற்றிருக்கிறது. இந்த தவறை உடனடியாக நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Jul 26, 2019, 11:06 AM IST
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவைக்குள் நுழைந்திருக்கிறார். இந்த மகிழ்ச்சியை மதிமுக தொண்டர்கள் பலர், ஒரு ரூபாய்க்கு டீ, வடை விற்று கொண்டாடியிருக்கிறார்கள். Read More
Jul 25, 2019, 14:07 PM IST
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக எம்.பி.க்கள் இன்று தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 23 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜ்யசபாவில் காலடி வைத்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என உரத்த குரலில் உறுதிமொழி வாசித்த போது எம்.பி.க்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். Read More