முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முக்கிய பேச்சு நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவனந்தபுரம் சென்றார். இன்று மாலை இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். Read More
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஹுஸ்டன் நகரில் நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவருடன் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். Read More
ஜெயலலிதா ஆட்சியில் போட்ட ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களில், வெறும் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தான் வந்திருக்கின்றது என்று தமிழக அரசே மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறதே, இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகின்றார்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
சிலருக்கு ஓம், பசு என்ற வார்த்தைகளை கேட்டாலே, ஏதோ 16ம், 17ம் நூற்றாண்டுக்கு போய் விடுவது போலவும், நாட்டை சீரழிப்பது போலவும் தோன்றுகிறது என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கிண்டலடித்தார். Read More
சென்னையில் இருந்து ரஷ்யாவின் கிழக்கு கடலோரப் பகுதியான விளாடிவோஸ்டோக் வரை கப்பல் விடுவதற்கு இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், இந்திய தொழிலாளர்களை ரஷ்யாவுக்கு வேலைக்கு அனுப்புவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. Read More
ரஷ்யாவிடம் எண்ணெய், ஹைட்ரோ கார்பன் வாங்கிக் கொள்வது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நாளை ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசுகிறார். பிரதமர் மோடி, செப்.4, 5 தேதிகளில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் நகருக்கு செல்கிறார். அங்கு கிழக்கு பொருளாதார அமைப்பின் மாநாட்டில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார். Read More
தமிழகம் இப்போதுள்ள சூழ்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாடு பயணம் தேவையற்றது. முதல்வர் வெளிநாடு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கேட்டுக் கொண்டுள்ளது. Read More
ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி நேரில் கண்டறிய ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று பயணம் செல்கிறார். ஆனால் மாநிலத்தில் தற்போது தான் நிலைமை சீரடைந்து வருகிறது.இந்நிலையில் காஷ்மீருக்குள் எதிர்க்கட்சியினர் சென்றால் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் அனுமதி இல்லை என அம்மாநில அரசு கைவிரித்துள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
இன்று காலையில் திடீரென சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவச பயணம் செய்ய அனுமதித்தனர். காரணம் என்ன தெரியுமா? சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை செய்தது. Read More
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சம்பத், விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் 28ம் தேதி முதல் 13 நாட்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். Read More