நாடு முழுவதும் பிரபலம் அடையும் மோடி பக்கோடா வியாபாரம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, நாடு முழுவதும் பக்கோடா போராட்டம் பிரபலமாகி வருகிறது.

Feb 6, 2018, 09:09 AM IST

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, நாடு முழுவதும் ‘பக்கோடா’ போராட்டம் பிரபலமாகி வருகிறது.

2018-19 பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி தொடர்பாக மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்தமோடி, “இன்றைய தினம் இளைஞர்கள் பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்றால் அதுவும் கூட வேலைவாய்ப்புதான்” என்று பதிலளித்தார்.

இது சர்ச்சையாக பேசப்பட்டது. வேலைவாய்ப்பு தொடர்பாக ஒரு பிரதமர் இப்படித்தான் பதில் அளிப்பதா? என்று கண்டனங்கள் எழுந்தன.

பிரதமருக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு பக்கோடா கடை திறந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமையன்று பெங்களூருவிற்கு வந்த நிலையில், அவரது பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு அருகே கல்லூரி மாணவர்கள் புதியதாக பக்கோடா கடை ஒன்றை திறந்தனர்.

அவர்கள் பக்கோடா தயார் செய்து அவ்வழியாக சென்றவர்களுக்கு வழங்கினர். பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பின்போது அணியும் ஆடையை அணிந்த வண்ணம் “மோடி பக்கோடா, அமித்ஷா பக்கோடா, எடியூரப்பா பக்கோடா” என விற்பனை செய்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரிலும் பக்கோடா கடை திறந்தனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆசம் கான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திலும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு, பக்கோடா தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

You'r reading நாடு முழுவதும் பிரபலம் அடையும் மோடி பக்கோடா வியாபாரம்! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை