நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமணை அறிக்கை
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, கடந்த ஆண்டு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நடராஜனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால் செயற்கை சுவாசம் வைத்துள்ளதாகவும், அவருக்கு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குளோபல் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமணை அறிக்கை Originally posted on The Subeditor Tamil
More Akkam pakkam News