ரசிகைகளின் செயலால் நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தார் நெகிழ்ச்சி!

by Rahini A, May 22, 2018, 16:22 PM IST

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ரசிகைகள் மூவரின் செயலால் ஸ்ரீதேவியின் குடும்பமே மெய்சிலிர்த்து உள்ளனர்.

இந்திய திரை துறையில் 50 ஆண்டுகள் கோலோச்சிய தலைசிறந்த நடிகையாகக் கருதப்படுபவர் ஸ்ரீதேவி. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பாராத வகையில் துபாயில் காலமானார். ஸ்ரீதேவியின் இறப்புக்கு அவரது ரசிகர்களும் குடும்பத்தாரும் இன்னும் பல்வேறு வகைகளில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த வகையில் பூனேவைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஸ்ரீதேவிக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். பெண்கள் தனியாகப் பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த மூன்று தோழிகளும் சவாலானப் பயணங்களை மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் பூனேவிலிருந்து கோவா வந்து சென்ற இப்பெண்கள் பயணித்த கார் தான் கவனம் ஈர்த்தது. காரணம், நடிகை ஸ்ரீதேவியின் திரைப்பட புகைப்படங்கள் பலவற்றைத் தொகுத்து தங்கள் கார் முழுவதும் இப்பெண்கள் ஒட்டிவைத்துள்ளனர்.

இதையறிந்த ஸ்ரீதேவி குடும்பத்தார், அப்பெண்களை தங்கள் இல்லத்துக்கே வரவழைத்து அப்பெண்களுடன் கலந்துரையாடி, புகைப்படம் எடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ரசிகைகளின் செயலால் நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தார் நெகிழ்ச்சி! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை