ஏர் இந்தியா நிறுவனத்தால் சிக்கலுக்கு மேல் சிக்கல்!

by Rahini A, Jun 2, 2018, 09:19 AM IST

ஏர் இந்தியா நிறுவனத்தை ஒரே அடியாக இழுத்து மூடாமல் இருப்பதைத் தவிர்க்க அந்நிறுவனத்தை ஏலம் விடுவதாக மத்திய அரசு அறிவித்தது.

ஆனால், ஒருவர் கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை என்பது அதிர்ச்சி அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை வாங்க மோடி தலைமையிலான மத்திய அரசு ஏலம் விட்டது.

இதற்கான ஏலம் நேற்று முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை ஒருவர் கூட ஏர் இந்தியாவை வாங்க முன்வரவில்லை. ஏர் இந்தியா, கடந்த சில காலங்களாக நஷ்டத்தில் இயங்குவதால் அந்த நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவெடுத்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது ஏறக்குறைய 5 பில்லியன் டாலர் கடன் உள்ளது.

இந்த கடனையும் புதிதாக ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் சுமக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான், அது ஏலத்தில் எடுக்கபடவில்லை என்று விவரம் அறிந்த நபர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

எதிர்பார்த்தபடி ஏர் இந்தியா நிறுவனம் ஏலத்துக்கு போகததால், ஏற்கெனவே கடனில் துவண்டு வரும் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவது அரசுக்கு சிக்கல் ஆகியுள்ளது. இது தன்னை மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்தவாதியாக சொல்லிக் கொள்ளும் மோடிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அவரின் அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து தீவிரமாக செய்லபட்டு வரும் நிலையில், இந்த விஷயம் கவனம் பெறுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஏர் இந்தியா நிறுவனத்தால் சிக்கலுக்கு மேல் சிக்கல்! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை