தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்

Jul 18, 2018, 18:39 PM IST

தாய்லாந்து குகையில் சிக்கி பின்னர் மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் சிகிச்சை முடிந்து நலமுடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங்க குறையை கால்பந்து பயிற்சியாளர் மற்றும் 12 இளம் வீரர்கள் பார்வையிடச் சென்றனர். அப்போது பெய்த கனமழையால், குகைக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, குகையில் இருந்து 17 நாட்களுக்கு பிறகு பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட அனைவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.

You'r reading தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை